Header Ads



கண்களில் வெங்காயத்தை தேய்த்து, கண்ணீர் வரவழைத்த ஒபாமா..? (Fox News)


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்களில் வெங்காயத்தை தேய்த்துக்கொண்டு தான் அழுதுள்ளார் என பாக்ஸ் நியூஸ் (Fox News) செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்துவது குறித்து சமீபத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஒபாமா, கடந்த 2012ஆம் ஆண்டு நியூடவுன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியானார்கள்.

அந்த குழந்தைகளை பற்றி நினைக்கும்போது எல்லாம் எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது என்று கூறிய அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் தனது கண்ணீரை துடைத்துக்கொண்டே, மீண்டும் தனது உரையை தொடர்ந்தார், ஒபாமாவின் கண்ணீர் அமெரிக்காவை மட்டுமின்றி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள பாக்ஸ் நியூஸ் (Fox News), அழுது அனைவரையும் ஈர்ப்பதற்கு அங்கு நடைபெற்றது விருது வழங்கும் விழா அல்ல. ஒபாமாவின் அழுகை நம்பும்படியாக இல்லை, அவர் கண்களில் வெங்காயத்தை தேய்த்து, செயற்கையாக கண்ணீரை வரவழைத்துள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியை கிண்டல் செய்து வெளியான இந்த செய்தி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. கொல்லப்படும் அமெரிக்க குழந்தைகளுக்காக அழும்போது அமெரிக்கா கொலைபுரிந்த குழந்தைகளுக்காகவும் அவர் அழுதிருக்க வேண்டும்.

    ஒருவேளை உண்மையாகவே அவர் மனமிரங்கி இடைவிடாது அழநேர்ந்தால் அதற்கு இன்னுமொரு பதவிக்காலம் கூட அவருக்குப் போதாது!

    ReplyDelete

Powered by Blogger.