Header Ads



மெலிந்த உடல் கொண்டவர்களே, உலகில் பாரிய மாற்றங்களைச் செய்தவர்கள் - ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உலகில் பாரிய மாற்றங்களைச் செய்தவர்கள் மெலிந்த உடலைக் கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் மைத்திரி ஆட்சி நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினை குறித்து பல்வேறு நிலைப்பாடுகளில் இருந்த நாம் தற்போது ஒன்றுபட்டு ஆட்சி செய்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1968ம் ஆண்டு பண்டாரநாயக்கவிற்கு நிகழ்ந்நது மைத்திரிபால சிறிசேனவிற்கு நேர இடமளிக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை தனிமைப்படுத்தப் போவதில்லை எனவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சகல சவால்களையும் தோற்கடிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.