Header Ads



குர்ஆன் மொழி பெயர்ப்­புகளை, அமைப்­பு­கள்­ வெளியிட தடை - தஃவா அமைப்­பு­க­ளை ஒன்றுசேர்க்கவும் திட்டம்

-ARA.Fareel-

நாட்டில் இயங்­கி­வரும் அனைத்து தஃவா அமைப்­பு­க­ளையும் பட்­டி­ய­லிட்டு அவ் அமைப்­பு­களை கட்டம் கட்­ட­மாக அழைத்து சுமு­க­மான பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­து­வ­தற்கு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

தஃவா அமைப்­பு­க­ளுக்கு மத்­தியில் நிலவும் முரண்­பா­டு­களைத் தீர்த்து ஒருங்­கி­ணைப்­ப­தற்­கா­கவே இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இது தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ‘Vi” க்கு கருத்து தெரி­விக்­கையில்;

‘தற்­போது எமது நாட்டில் பல்­வேறு தஃவா அமைப்­புகள் இயங்கி வரு­கின்­றன. இவ்­வ­மைப்­புகள் கொள்கை ரீதியில் முரண்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்களை நிர்­மா­ணிப்­பதில் கூட இவ் அமைப்­பு­க­ளுக்கு இடையில் போட்டி நில­வு­கின்­றன. இதனால் எமது சமூ­கத்தில் ஒற்­றுமை இல்லை என ஏனைய சமூ­கங்கள் கருதும் நிலை உரு­வா­கி­றது.

இதனால் அனைத்து தஃவா அமைப்­பு­க­ளையும் கட்டம் கட்­ட­மாக தனித் தனியே அழைத்து பேச்­சு­வார்த்தை நடாத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான பேச்­சு­வார்த்­தை­களின் பின்பு அமைச்சு பொது­வான கலந்­து­ரை­யா­டலை நடாத்தி முரண்­பா­டு­களை தீர்ப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளும்.

குர்ஆன் மொழி பெயர்ப்­புகள் கூட அமைப்­பு­க­ளினால் தனித் தனியே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.எதிர்­கா­லத்தில் இதற்குத் தடை விதிக்­கப்­ப­ட­வுள்­ளது. குர்ஆன் மொழி பெயர்ப்­பு­களை முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யின்றி எவ­ருக்கும் மொழி­பெ­யர்ப்புச் செய்து வெளி­யிட முடி­யாது.

8 comments:

  1. Alhamdulillah. good decision

    ReplyDelete
  2. Dear Minister Haleem, Pls given to full power to ACJU

    ReplyDelete
  3. Very good decision, but its too late now...
    There should be a leadership, all movements / jamaths should be under an umbrella, definitely, no doubt, will be the most tough task....may Almighty Allah shower his blessings to all those who involved....

    ReplyDelete
  4. அனைவரும் ஒன்றுபட ஒரேஒரு வாய்புத்தான் உள்ளது அது "லாஇலாஹ இல்ல அல்லாஹூ முஹம்மது ரசூலுல்லாஹ்" என்பதை ஆராய்ந்து நெறிப்படுத்தும்போது மட்டும்தான் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  5. மிகவும் நல்லதொரு விடயம் கட்டாயம் அமுல்படுத்தவும்.இல்லாவிட்டால் இன்னும் சில நாட்களில் தப்லீக் குர்ஆன்,தொளஹித் குர்ஆன்.ஜமாத்தே இச்லாமி குர்ஆன்,P.J
    குர்ஆன்,தரீக்கா குர்ஆன் என்று வரும் காலம் தொலைவில் இல்லை

    ReplyDelete
  6. எல்லோருக்கும் சமமான தீர்வு வந்தால் சிறந்தது மாறாக நற்பொழுது நடைமுறையில் உள்ளது போன்ற சுயநலவாதிகளுக்கு மாத்திரம் அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் தலைவர்களின் கையில் சென்றால் சுமூகமான முடிவு வராது, காரணம் acju ஒரு பொதுவான இயக்கம் என நம்பிய மக்களுககு அது ஏமாற்றத்தையே கொடுத்தது sltj தர்ஜமா வெளியிடும் பொழுது நடுநிலமையை கையாள வேண்டிய இவர்கள் எரிகிற நெருப்பில் இன்னும் எண்ணையை வாறி ஊற்றினார்கள், அதுவும் பொறுப்புள்ளவர்கள் யாரும் கையொப்பிடாமல் நழுவியது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.