Header Ads



மாட்டுக்கறி சாப்பிட்டால், தலையை வெட்டுவோம்

கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஷிவமோகாவின் கோபி சர்க்கிள் பகுதிக்கு வந்து மாட்டுக்கறி சாப்பிட்டால் அவரது தலையை வெட்டுவோம் என்று பா.ஜ.க. கொலை மிரட்டல் விடுத்துள்ளது. 

அண்மையில் சித்தராமையா தாம் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் அதை யாரும் தடுத்துவிட முடியாது என்றும் கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஷிவமோகாவில் பா.ஜ.க. நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

Will behead CM if he eats beef in Shivamogga, warns BJP leader இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போது ஷிவமோகா பா.ஜ.க. பிரமுகர் சன்னபசப்பா, தான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்க முடியாது என்கிறார் சித்தராமையா... அவருக்கு தைரியம் இருந்தால் ஷிமோகாவின் இந்த கோபி சர்க்கிளில் வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும்... அவரது தலையை வெட்டுவோம்... இதில் வேறு சிந்தனைக்கே இடம் இல்லை.. இப்போது மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கூறுகிறார் சித்தராமையா... பின்னர் காங்கிரசார் நாய், நரி கறியெல்லாம் சாப்பிட்டு அவரை மகிழ்விப்பார்கள் என்றார். 

கர்நாடகா முதல்வரின் தலையை வெட்டுவோம் என்ற பா.ஜ.க.வின் பகிரங்க கொலை மிரட்டல் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 comments:

  1. அல்லாஹ் இப்படித்தான் அவன் வாயாலேயே போலீசில் மாட்ட வைக்கிறான்

    ReplyDelete
  2. இதற்குப் பெயர்தான் மத வெறி. மதம் ஒரு அபின் என்று கார்ல் மார்க்ஸ் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை. அபினை உண்டவனுக்கு அது புரிவதில்லை.

    ReplyDelete
  3. Nilavan markes! மதவெறி பிடித்தால் அவர் மதத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும்.
    These are stupids who hate others for their status and power. If they are really religious they should follow what Hinduism has said.
    Eating beef is punishable by death in Hinduism ? In fact as far as I know Some of the Hindu gods had eaten meat. Correct me if I am wrong.
    ISIS , BJP , shivsena , Taliban they are all same with different identify. Simply stupids
    None of them follow what their religion has preached them.

    ReplyDelete

Powered by Blogger.