Header Ads



மஹிந்தவுக்கு பிறந்த நாள் - மைத்திரிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது

எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ச தனது 70ம் பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

பிறந்த நாளை முன்னிட்டு அனுராதபரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் ருவான்வெலிசேயாவில் 84,000 விளக்குகள் ஏற்றி விசேட பூஜை ஒன்றை நடத்தியும், ஸ்ரீமஹா போதியில் விசேட போதி பூஜையொன்றும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

3 comments:

  1. அதாவது அடுத்த பிரதமாராக நான் வந்து உன்னை கம்பி என்ன வைப்பேன் என்று மத பூஜை நடக்கும் அதில் நீங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுங்கள் என்றுதான் அர்த்தம்.

    ReplyDelete
  2. இந்த நிகழ்வில் ஜனாபதி மைத்திரி அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் ராஜபக்ச மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகும் சந்தர்பத்தை ஏற்படுத்துவதோடு, ராஜபக்ச மீது மைத்ரி கூரிய குற்றச் சாட்டுக்கள் மலினப்படுத்தப்பட்டு விடும்.

    ReplyDelete
  3. இந்த நிகழ்வில் ஜனாபதி மைத்திரி அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் ராஜபக்ச மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகும் சந்தர்பத்தை ஏற்படுத்துவதோடு, ராஜபக்ச மீது மைத்ரி கூரிய குற்றச் சாட்டுக்கள் மலினப்படுத்தப்பட்டு விடும்.

    ReplyDelete

Powered by Blogger.