Header Ads



கண்டியில் SLPS III போட்டிப் பரீட்சைக்கான, முழுநாள் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

- அபூபக்கர்-

ஒக்டோபர் 10ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் வகுப்பு போட்டிப் பரீட்சைக்கான ஒருநாள் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 08ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. 

முக்கிய சில வளவாளர்களைக் கொண்டு, The Young Friends அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மேற்படி செயலமா்வு கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள, தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 

பிரபல வளவாளர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ள மேற்படி வழிகாட்டல் செயலமா்வில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் 071-4122523 (ரம்ஸி ராசிக்), 077-7508043 (ராபி ஷரீப்தீன்) ஆகிய தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

மட்டுப்படுத்தப்பட்ட  எண்ணிக்கையினருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

ஒரு சமூக சேவை அமைப்பாகச் செயற்படும் The Young Friends, அன்மையில் மேற்படி இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் தோற்றவுள்ளவா்களுக்கான வழிகாட்டல் வகுப்புகளை ஏற்பாடு செய்து நடாத்தியமையும், கடந்த காலங்களில் இலங்கை நிர்வாக சேவை, கிராம உத்தியோகத்தர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை போன்ற பரீட்சைகளுக்கான வழிகாட்டல் வகுப்புகளை ஏற்பாடு செய்து நடாத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.