எங்கள் கட்சியில், தீவிரவாதிகள் உள்ளனர் - எஸ்.பீ.திஸாநாயக்க
மஹிந்த, மைத்திரியை இணைக்க சென்று இறுதியில் தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக சமூக முன்னேற்றம் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
நான் முன்னாள் ஜனாதிபதியிடம் மைத்திரியை தேர்தல் நடவடிக்கையில் செயற்பட இடமளிக்குமாறு கோரினேன். அது கடல் அலை போன்று என்னையே தாக்கி சிக்கலில் தள்ளிவிட்டது.
எனினும் நான் தான் முன்னாள் ஜனாதிபதியையும் தற்போதைய ஜனாதிபதியையும் இணைக்க முயற்சித்தேன். இறுதியில் நான் சிக்கிக்கொண்டேன். நான் ஜனாதிபதியிடம் ஒன்றையும் கோரவில்லை.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்து சென்று அமைச்சு பதவிகளையும் வழங்கினார். இவை அனைத்தும் கட்சிக்காக தான், எனினும் இந்த கட்சியில் தீவிரவாதிகள் உள்ளனர்.
அது எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment