Header Ads



நவம்பர் 7 இல் முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டை எதிர்வரும் நவெம்பர் மாதம் 07 ஆம் திகதி, சனிக்கிழமை கண்டியில் நடாத்துவதற்கு கட்சியின் அரசியல் உச்சபீடம் தீர்மானித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அரசியல் உச்சபீடக் கூட்டத்திலேயே இந்த முடிவு ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரீ. ஹசன் அலி தொிவித்தார்.

No comments

Powered by Blogger.