Header Ads



துருக்கியில் இந்த வருடத்தில் மாத்திரம், குர்ஆனை மனனம் செய்தவர்கள் 120080

உலகில் அதிகமான மக்களால் மனனம் செய்யபட்டு வரும் ஒரே வேத நுல் திரு குர்ஆன் மட்டுமே. திருகுர்ஆனை முஸ்லிம்கள் மனனம் செய்யும் அளவிர்கு உலகில் வேறு எந்த நுலையும் எந்த மதத்தவரும் மனனம் செய்வதில்லை.

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் லட்சகணக்கான குழந்தைகள் இளைஞர்கள் முதியவர்கள் பெண்கள் என சமுகத்தின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் திருமறையை ஆறுவத்துடன் மனனம் செய்வதை நாம் காணமுடியும்.

இதனால் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரங்களை கடந்து இலட்சகணக்கான ஹாபிள்களை நாம் பார்க்க முடியும். 

2015 ஆண்டு துருக்கி நாட்டில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்கள் பற்றிய விபரத்தை சில தினங்களுக்கு முன்பு துருக்கி அரசு வெளியிட்டது.

ஆம் ஒரு லட்சத்தி இருபதாயிரத்தி எண்பது (120080) ஹாபிகள் என துருக்கி அரசு கூறியிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இலட்சகணக்கான முஸ்லிம்கள் தங்கள் வேதமான திருகுர்ஆனை மனதில் சுமந்து வருகின்றனர்

2 comments:

Powered by Blogger.