Header Ads



சுற்றுலா விசாவில் குவைட்டுக்கு வேலைக்குச் சென்ற 11 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சுற்றுலா விசாவில் குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற 11 இலங்கையர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

மாத்தறை, பதவி ஶ்ரீ புர, ரக்வான, வாழைச்சேனை, வவுனியா, களுத்துறை மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இவர்கள் கடந்த முதலாம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். பின்னர் குவைத் விமான நிலைய அதிகாரிகள் குறித்த குழுவினரை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

1 comment:

  1. There are more than 20 officers from the sri lanka bureau of foreign employment to check all departing migrant workers and how these people slipped their checkpoints ?something fishy. over to you minister.

    ReplyDelete

Powered by Blogger.