Header Ads



சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன், பிரதமர் ரணில் கலந்துரையாடல்

இலங்கை தொடர்பான அமெரிக்க யோசனைக்கு மேலும் திருத்தங்கள் முன்வைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அமெரிக்க யோசனை தொடர்பாக  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, அமெரிக்க யோசனை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இறுதியுத்தத்தின் போதான மனிதவுரிமை மீறல்கள் பற்றி பொதுநலவாய நாடுகள் அல்லது வெளிநாட்டு சட்டவல்லுனர்கள் விசாரணையில் ஈடுபடுவார்களானால் அவர்கள் இலங்கையின் சட்ட மற்றும் பிரதானிகளின் கீழேயே இயங்குவார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.