Header Ads



கொண்டயா உள்ள நீர்கொழும்பு, சிறைச்சாலைக்கு கடும் பாதுகாப்பு

கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமி சேயா சதேவ்மி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயா என்ற சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் விளக்கமறியல் சிறைக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகள் குறித்த நபரின் செயலை வன்மையாக கண்டித்துள்ளதால், அவர்களால், கொண்டயா என்ற நபருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொண்டயா எவ்விதமான பேச்சுகளும் இன்றி அமைதியாக சிறைக்கூண்டிலில் இருந்து வருவதாகவும் கைதிகள் இவரை பார்க்க ஆர்வம் காட்டி வருவதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.