Header Ads



நாமும் பிரார்த்திப்போம்...!


ஆப்கனை பூர்வீகமாக கொண்ட சேகர் ஆமர் குடும்பத்தோடு லண்டன் குடியுரிமையில் வாழ்ந்து வந்தார். தனது செல்வத்தை தனது பூர்விக நாடான ஆப்கனுக்கு செலவிட தீர்மானித்தார். குண்டு வெடிப்புகளால் சிதைந்த தனது ஊரை செப்பனிட குடும்பத்தோடு 2001 ல் ஆப்கன் நோக்கி பயணமானார். பொது சேவை செய்தால் அது அமெரிக்கர்களுக்கு பிடிக்காதல்லவா? எனவே தாலிபான்களுக்கு உதவினார் என்ற பொய் காரணத்தை ஜோடித்து குவாண்டனோமோ சிறையில் ஆமரை அடைத்தது அமெரிக்கா. 

ஆனால் விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமானது. ஜார்ஜ்புஷ் இரண்டு முறை ஆமரை விடுதலையாக்க உத்தரவிட்டார். பராக் ஒபாமாவும் இவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அனால் இந்த உத்தரவுகள் குவாண்டனோமோ நிர்வாகிகளால் தள்ளி போடப்பட்டது. 13 வருட போராட்டத்துக்குப் பிறகு தற்போது விடுதலையாகிறார் சேகர் ஆமர். தொலைந்து போன இவரது 13 வருட வாழ்வை அமெரிக்காவால் திருப்பி தந்து விட முடியுமா?

இவரைப் போன்று வல்லரசுகளாலும் இந்துத்வாக்களாலும் பொய் வழக்கு போட்டு ஜோடிக்கப்பட்டு விசாரணக் கைதிகளாகவே காலம் தள்ளும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்கள் விடுதலையாக நாமும் பிரார்த்திப்போமாக! அவர்களும் தங்கள் மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்வை சுவைக்கும் சூழலை இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பானாக!

முதல் படம் சிறைவாசத்துக்கு முன்பு: இரண்டாவது படம் சிறைவாசத்தக்குப் பின்: சிறை வாழ்க்கை ஒருவனின் தோற்றத்தை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது?

தகவல் உதவி
பிபிசி.காம்
25-09-2015

சுவனப் பிரியன் 


No comments

Powered by Blogger.