Header Ads



அம்பாறை அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாதது ஏன்..?

(ஏ.எல்.நியாஸ்)

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவு முன்மொழிவுத்திட்டத்திற்கமைவாக நாட்டில் உள்ள அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் சலுகை அடிப்படையில் (50000ரூபா) மோட்டார்; சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தன. அனுராதபுரத்தில் தொடங்கிய ஆரம்பம் அதனைத் தொடர்ந்து மாத்தளை பொலநறுவை எனத் தொடங்கி நாட்டின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டத்திலும் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையும் அம்பாறை  மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமையினால்; அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இவை வழங்கப்படுமா? என்பதில்  அரச உத்தியோகத்தர்களிடையே சந்தேகம் உருவாகியுள்ளது.

ஏனைய மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்கள்; அம்பாறை  மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என  அம்பாறை மாவட்ட அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

அம்பாறை  மாவட்ட அபிவிருத்திக்; குழு தலைவர்களே.... முஸ்லிம், தமிழ் சமூக அமைச்சர்மார்களே ....... எங்கள் வாக்குகளர்  தெரிவான நீங்கள் ஏன் இதை எங்களுக்கு பெற்றுத்தர முடியாது    இது உங்களின் கவனத்திற்கு..

No comments

Powered by Blogger.