Header Ads



மஹிந்தவின் பைல்கள் என்னிடமுள்ளன - மேர்வின் சில்வா எச்சரிகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பான பைல்கள் தன்னிடம் இருப்பதாக மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தனியார் தொலைக்காட்சியொன்றின் சலகுண எனும் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் தோல்விக்கு அவரது தம்பிகளான கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே காரணம்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அஅதனைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் என் போன்றவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்.

இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு என்னைத் தொந்தரவுபடுத்தினால் மஹிந்த அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பாக என்னிடம் இருக்கும் பைல்களை வெளியிடுவேன் என்றும் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

4 comments:

  1. இவருக்கு தெரியாமலே இவருடைய சகாக்கள் இவருக்கு எதிராக சாச்சி சொல்லும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது.இவருக்கு தெரியாது கியாமத் நாளில் கைகள் பேசும் கால்கள் சாட்சி சொல்லும் என்பதை.இந்த விடயங்களில்சிந்திக்கும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களுக்கு நிறைய படிப்பினை உண்டு.

    ReplyDelete
  2. தமிழ் சினிமாவில், கதாநாயகர்களால் சாதிக்க முடியாத விடயங்களை சிலவேளைகளில் ஜோக்கர் சாதிப்பதுண்டு.

    ReplyDelete
  3. Sister jasslya very like cinema

    ReplyDelete

Powered by Blogger.