Header Ads



கடும் நிபந்தனைகளுடன் தேசியப் பட்டியில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டுள்ள தேசியப் பட்டியில் நியமனம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், அந்த கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.க்களுக்கு கால்கட்டு போடப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசியப்பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள், அமைச்சர், பிரதியமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்தாலோ அல்லது கிடைக்காவிட்டாலோ, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்பது கட்டாயமாகும். 

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களிடம் இருந்து எம்.பி பதவியை துறப்பதற்கான முன்கூட்டிய இராஜினாமா கடிதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், அத்தகவலை உறுதிப்படுத்தமுடியவில்லை.    

No comments

Powered by Blogger.