Header Ads



அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவேன் - மகிந்த

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும்,அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி தான் பாராளுமன்றத்தின் ஊடாக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடப் போவதாக இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுத் தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமக்கும், தமது கட்சிக்கும் வாக்களித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக தங்கள் வாக்குகளை பயன்படுத்திய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகச் தெரிவித்துள்ளார்.
அனைத்து அழுத்தங்களுக்கு மத்தியிலும் தன்னுடன் செயற்பட்ட அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வதாக அவர் கூறியுள்ளார்.

தான் தேர்தலில் போட்டியிட்ட குருணாகல் மாவட்டத்தின் அனைத்து வேட்பாளர்களுக்கும், வாக்குகளை வழங்கிய அனைவருக்கும், விசேடமாக ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. இவர் இப்போது "முன்னாள் ஜனாதிபதியா இன்னாள் பா.உ." வா?
    அல்லது முன்னால் ஜனாதிபதி பின்னால் பா.உ. வா?

    ReplyDelete
  2. மனித உருவில் ஒரு கேவலமான ஜந்து. காறி உமிழ்ந்தாலும் துடைத்து விட்டு கதிரையைத் தேடும்.

    ReplyDelete
  3. உண்மையிலே நீ ஒரு மாங்கா மடையன்தான்

    ReplyDelete
  4. உலகத்தில் எல்லாவகையான உயிர்களிலும் திண்டத்தை வாந்தி எடுத்து மீண்டும் சாப்பிடும் பிராணி நாய் மட்டும்தான். அதவிட மோசமாக இவன் இருக்கான்.ஒருவகையில் பார்லிமண்டுக்கு வருவது நல்லதுதான் மூஞ்சில எல்லாரும் காரி துப்ப.

    ReplyDelete
  5. அவன் ஞானசாராவோட சேர்ந்து பாம்பு ஆட்டுங்க
    அப்பச்சி
    அதுக்குத்தான் நீங்க லாயக்கு

    ReplyDelete

Powered by Blogger.