Header Ads



தேசிய பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தாக்கல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபையின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமல் தேசிய பட்டியலுக்கு பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஐக்கிய முன்னணியின்  தலைவர் தினேஷ் குணவர்தன வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தினேஷ் குணவர்தன இன்று உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னணியின் பங்கு கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணிக்கு தெரியாத, தோல்வியடைந்த நபர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அக் கட்சியில் இதற்கு முன்னர் பெயரிடப்பட்ட பிரதிநிதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.