Header Ads



''தேசிய அரசாங்கத்தில் இருந்து, எந்நேரத்திலும் விலகிச்செல்ல வாய்ப்பு''


தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தத்தின்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் இறுதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களை பகிர்வது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அதில் எவ்வித தோல்விகளும் ஏற்படவில்லை. இதனையடுத்து அமைச்சரவை பதவியேற்றுக் கொள்ளும்.

ஏற்கனவே தேசிய அரசாங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு இரண்டு கட்சிகளும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாற்றத்தின்படி தேசிய அரசாங்கத்தில் இருந்து எந்த நேரத்திலும் கட்சி ஒன்று விலகிச் செல்ல வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.