UNP யில் அர்ஜூண ரணதுங்க..?
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூண ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து ரணதுங்க இன்று மாலை அந்த கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதால், அர்ஜூண ரணதுங்க அதிருப்தியடைந்துள்ளார்.
மகிந்தவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால், தான் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
Post a Comment