இணைந்து போட்டியிட SLMC க்கு, UNP அழைப்பு
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் அதன் உயர்பீடம் இன்று (2) வியாழக்கிழமை கூடி ஆராயவுள்ளது. தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதா அல்லது ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்படுமென கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பிலும் உயர்பீடம் கலந்தாராயுமென முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment