எனக்கு எதுவும் தெரியாதென, மைத்திரி பதிலளிக்க முடியாது - தெளிவான உத்தியோகபூர்வ பதிலே அவசியம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புரிமை வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாதமையினால் தனக்கு இது தொடர்பில் கருத்தை வெளியிட முடியவில்லை என மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள செய்தி சேவை ஒன்று இன்று காலை அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி எனக்கு எதுவும் தெரியாதென பதிலளிக்க முடியாது. தெளிவான உத்தியோக பூர்வ பதில் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment