Header Ads



மைத்திரிக்கு ஆதரவான அமைச்சர், ஐக்கிய தேசியக்கட்சியில்...!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில்  போட்டியிட மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வாய்ப்பு வழங்கப்பட்டமையை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் முதலாவது பிளவு ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிதிச் செயலாளர் எஸ்.பி.நாவின்ன அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

மைத்திரிபால- ரணில்  அரசாங்கத்தில் நாவின்ன அமைச்சராகவும் செயற்படுகிறார்.

இந்தநிலையில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தே தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.