Header Ads



கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள், நம்பி வாக்களிக்கக்கூடிய ஒரே தெரிவு

 (மூத்த ஊடகவியலாளர் நௌசாத் மொஹிதீனின் பேஸ்புக் பக்கத்திலிருந்து ஒருபகுதி)
 
தேர்தல் வேற்பு மனு தாக்கல் முடிடைந்து தேர்தல் களமும் உடனடியாகவே சூடேறத் தொடங்கிவிட்டது. நான்கொழும்பில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவன் என்பதால் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களோடு சில கருத்துக்ளை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் அடிப்டையில் ஐதேக வுக்கு ஆதரவானவர்கள். இம்முறை கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்கள் விரும்பியோ விரும்பாமலோ ஐதேக வுக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காரணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் அரசியல் மறுஜென்மம். இந்த இனவாத கும்பலையும் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்ளை முற்றாகக் காட்டிக்கொடுத்த மைத்திரியின் கரங்ளையும் நசுக்க வேண்டுமானால் இன்றைய நலையில் ஐதேக வை ஆதரிப்தை தவிர வேறு மாற்று வழி இல்லை. மற்றபடி ஐதேக வும் அதன் தலைவர்களும் புனிதர்கள் என்று நான் சொல்லவில்லை. இதை தவிர வேறு வழி இல்லை என்பதே எனது கருத்து.
முஜிபுர் ரஹ்மான் உணமையில் இவர் நம்மடவர், என்ற மனசிலும் இவர்தான் என்ற வாசகங்களுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர்தான். கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் எந்தப் பாகத்தில் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் ஓங்கி ஒலிக்கும் குரல் இவருடைய குரல் தான். கொழும்பில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியால் முன்னேறியவர்.கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் பாடசலைகள் பலவற்றின் பிரச்சினைளை முன்னின்று முகம் கொடுத்தவர். கொழும்பு முஸ்லிம்ளைப் பொருத்தமட்டில் முஜிப் இல்லாத அடுத்த பாராளுமன்றம் வெறும் வெறிச்சோடிப்போன சபையாகத் தான் இருக்க முடியும். கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் இன்றைய நிலையில் நம்பி வாக்களிக்க கூடிய ஒரே முஸ்லிம் இவர்தான். முஜிபுக்கு வாக்களிக்க முஸ்லிம்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்

அப்படியானால் ஏனைய இரண்டு விருப்பு வாக்குளையும் என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான விடைகொழும்பு முஸ்லிம்கள் இனவாதிகள் அல்ல. அவர்கள் மடையர்களும் அல்ல. தமக்கு உதவியவர்களை மறப்பவர்களும் அல்ல என்பதை நிரூபிக்க இந்த தேர்லை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம். அதற்கான தெரிவு மனோ கணேஷன் மற்றும் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர். மனோ தலைநகரை மையப்படுத்தி அரசியல் செய்பவர். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் முஜிப் மற்றும் அஸாத் சாலி ஆகயோருடன் இணைந்து வீதியில் இறங்கி போராடியவர் மனோ என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதபோல் ஹிருணிகா மகிந்த தரப்பால் அநீதி இழைக்கப்பட்ட ஒருவர். கொலன்னாவை தேர்தல் தொகுதியில் முஸ்லிம் குடியேற்றங்கள் ஆரம்பமான காலத்தில் அங்கு பள்ளிவாசல்ளை நிர்மாணிக்கவும் ஏனைய விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு ஒத்தாசையாக இருந்தவர் ஹருணிகாவின் தந்தை. தந்தை வழயைப் பின்பற்றி முஸ்லிம்ளோடு மிகச் சிறந்த உறவை பேணி வருபவர் ஹிருணிகா.

எம்மிடம் மூன்று விருப்பு வாக்குகள் உள்ளன என்பதற்காக அவற்றை பயன்படுத்தி தலையாட்டி பொம்மைகளை பாராளுமன்றம் அனுப்பவேண்டும் என்ற தேவை கொழும்பு முஸ்லிம்களுக்கு இல்லை. சிந்திப்போம் விவேகமாக செயற்படுவோம்.

2 comments:

  1. கடந்த மாகாணசபைத்தேர்தலில் நான் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கனிஸ்ட தலைமை தாங்கும் அதிகாரியாக கடமையில் இருந்தேன்.கண்தெரியாத புள்ளடியிடத் தெரியாத பல முதியோருக்கு வாக்குச்சுட்டில் புள்ளடியிட்டுக் கொடுக்குகையில் அவர்களின் தெரிவினை வினவினேன் 30 31 40 என்றார்கள் நானும் புள்ளடியிட்டு வாக்குப்பெட்டியில் போடும் போது ஒரு மூதாட்டி கூறினார் "நவ்சர் பௌசி தந்த கண்ணாடிஅய்தான் விளங்குதில்ல"நவ்சர் பௌசிக்கிட்டய மூக்குக்கண்ணாடி வாங்கிக் கொண்டு இந்த 3 பேருக்கு வாக்களிக்கின்றா என்றால் இவர்கள் அந்த மூதாட்டி மனதில் இடம்பிடித்திருக்கிறார்கள் போல..வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.