வெலிக்கடை சிறையில் இப்தார் வசதி இல்லை - இரவு நேர தொழுகைக்கும் அனுமதி மறுப்பு
(மூத்த ஊடகவிலாளர் நௌஸாத் மெஹிதீன்)
வெலிக்கடை சிறைச்சலையில் இந்த வருடம் முஸ்லிம் கைதிகளுக்கு இப்தார் வசதிகள் உரிய முறையில் வழங்கப்படவில்லையாம். இரவு நேர தொழுகைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்.
சந்தர்ப்பவசத்தால் செய்யாத குற்றத்துக்காக கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் உளளே இருக்கும் ஒரு நபரின் சகோதரி ஒருவர் என்னிடம் இதை தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சலையில் நோன்பு காலத்தில் கைதிகள் நலனை பராமரிக்கும் பொறுப்பை வை.எம்.எம்.ஏ மற்றும் எம்.ஐ.சி.எச் ஆகிய அமைப்புக்கள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றன என கேள்விபட்டுள்ளேன்.
அவர்கள் மிகச் சிறந்த முறையில் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்ளையும் மீறி தீய சக்திகள் செயற்படுகின்றனவா? சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களில் பொழுதுபோக்கிற்காக இப்தார் நடத்துபவர்கள் இதை கவனத்தில் கொள்வதும் நல்லது.
Post a Comment