Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம்களின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது - உத­ய­ராசா

கதிர்­காம யாத்­தி­ரி­கர்­களை அவ­ம­திக்கும் வகையில் கிழக்­கி­லுள்ள முஸ்லிம் பகு­தி­களில் சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும் என்று சிறி­ரெலோ கட்­சியின் செய­லாளர் ப. உத­ய­ராசா தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில், 

வடக்கு, கிழக்­கி­லி­ருந்து கதிர்­கா­மத்­துக்கு இந்து மத பக்­தர்கள் வரு­டந்­தோறும் பாத யாத்­திரை செல்­வது வழக்­க­மாகும். இம்­மு­றையும் இந்து மத பக்­தர்கள் பெரு­ம­ள­வானோர் பாத­யாத்­திரை சென்­றி­ருந்­தனர். இவ்­வாறு பாதயாத்­திரை சென்­ற­வர்கள் கிழக்கில் முஸ்லிம் பகு­திகள் சில­வற்றில் கேலிக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இவ்­வா­றான செயற்­பாடு கண்­டிக்­கத்­தக்­க­தாகும். ஒரு மதத்­தி­னரின் செயற்­பா­டு­களை மற்­றைய மதத்­தினர் மதிக்க வேண்டும். இதன்­மூ­லமே நாட்டில் நல்­லெண்­ணத்தை ஏற்­ப­டுத்த முடியும். இதனை விடுத்து பாதயாத்­தி­ரி­கர்­களை அவ­மா­னப்­ப­டுத்தும் விதத்தில் நடந்துகொள்வது முறையான செயற்பாடல்ல. இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள நடத்தப்பட வேண்டும் என்றுள்ளது.

7 comments:

  1. These stupid hooligans should b rounded up n taught what is real Islam how Rasulullah sal ) respected other faiths.
    Its an opportuniyy to show our hospitality to the pilgrims in this month of Ramadan .

    ReplyDelete
  2. ஏனைய மதத்தவர் புண்படும் படி அவர்களின் கடவுளை , மதத்தை பற்றி நிந்திக்க வேண்டாம் என இஸ்லாம் சொல்கிறது. இதை முஸ்லிம்களாகிய நாம் சரிவர பின்பற்ற வேண்டும். குறிப்பாக பல் சமுக கலாசாரங்களைக் கொண்ட எமது நாட்டில் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த ஈனச் செயலை செய்தவர்களுக்கு எதிராக அந்தந்த ஊர் பள்ளிகளினால் சரியான முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அடுத்த மத மக்களையும் மதத்தையும் மதித்து நடப்பதும் இஸ்லாத்தில் ஒரு கடமை இதை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும் கேளிசய்தவர்கள் யாரன்பதை தீர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டிக்க தக்க விடயம்.

    ReplyDelete
  4. எவராக இருந்தாலும் இது கண்டிக்கத்தக்கது. மற்ற மதத்தவர்களை மதித்து நடக்க வேண்டும்.ஆனால் உதயராசா அவர்களே கிழக்கு மகான முஸ்லிம்கள் என நீங்கள் குறிப்பிடுவது தவறு.ஒரு சில களிசரயல் செய்ததற்காக எல்லோரையும் குற்றம் சுமத்தாதீர்கள்

    ReplyDelete
  5. Only JM publishes this news? Exactly where it happened and when? Don't aggravate communalism.

    ReplyDelete
  6. கிழக்கு மாகானப்பாதையில் கிழக்குமாகான முஸ்லிம்கள் மட்டும்தான் பயணிப்பதில்லை சில வழிப்போக்கர்கள் விடும் சேட்டையை முஸ்லிம்களின் தலையில் போடக்கூடாது .சரியாக இனம்கண்டு தண்டிப்பிப்பது,குறைகூறுவது நல்லது.

    ReplyDelete
  7. Culprits should be brought before law and order . suppose if you don't have substantial proof for your statement you may be a culprit for making disharmony among communities.

    ReplyDelete

Powered by Blogger.