தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்ட முயற்சி - சுஜீவ சேனசிங்க
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டி வாக்குகளை சேகரிக்க முயற்சிப்பதாக பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யார் எவ்வாறு செயற்பட்டாலும் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறைமை ஒன்றை அமுல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
தற்போது ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் எவருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படுவதில்லை. பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நல்லாட்சி ஊடாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் சாதாரணமாக வாகனமொன்று மோதி தீப்பற்றி எரிவதில்லை. நாரஹேன்பிட்டியில் வாகனம் மதிலில் மோதி வெடித்து ரகர் வீரர் தாஜூடீன் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
எனினும் விசாரணகைளின் மூலம் இந்த சம்பவம் ஒர் கொலை என கண்டறியப்பட்டுள்ளதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment