Header Ads



மே மாதம் முதல் வாரம் பாராளுமன்றத்தை கலைத்து, ஜூனில் தேர்தல் - தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்

எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பொதுத்தேர்தலை நடத்த தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 23.04.2015 கூடிய தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் உத்தேச தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளர்.

இதன்படி எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் தேர்தலின்போது சீர்திருத்தத்தின்கீழ் விருப்புத் தெரிவு வாக்குகள் ரத்து செய்யப்பட்டு தொகுதிவாரி மற்றும் விகிதாசாரமுறை பின்பற்றப்படவுள்ளது.

இதற்கமைய தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


No comments

Powered by Blogger.