Header Ads



பசில் ராஜபக்ச கைது

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  

இந்த நிலையில், இன்று காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 comment:

  1. நாளைக் காலையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. பசிலின் பேரப்பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல, உடுப்பு அயன் பண்ண ஆளில்லை என்று சொல்லிக் கூட பிணையில் விடுதலை செய்யலாம். விமல் வீரவன்சவின் மனைவியையும் அப்படித்தானே விடுதலை செய்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.