Header Ads



இஸ்லாமிய முறைப்படியான, நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புண்ணிய தானம் எனப்படும் நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வுகளில் இஸ்லாமிய முறைப்படியான நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச் முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டார்.

இதன் போது காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வறிய மக்களுக்கு நெல் தானம் வழங்கப்பட்டது. இங்கு ஆசியுரையை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துல் காதர் (பலாஹி) வழங்கினார்.

No comments

Powered by Blogger.