Header Ads



மகிந்தவுக்கு ஞானசார பதிலடி..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது அமைப்பினரை மேற்குலக நாடுகளின் சூழ்ச்சியாளர்கள் என கூறுவாராயின் அதனை ஒப்புவிக்கும் சாட்சியங்களை முன்வைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் சிங்கள இணையத்தள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி விரும்பினால் தன்னிடம் காணப்படும் ஆவணங்களை இதற்காக பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்ற பேராசையில் ராஜபக்ச இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் நாடு மற்றும் இனம் மீது பற்றில்லாதவர்களின் செயற்பாடுகளே இதற்கு காரணம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பதவிக்காலம் முடியும் முன்னர் தேர்தலை நடத்துமாறு மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியது பொதுபல சேனா அல்ல. அவரது தோல்விக்கு எமது அமைப்பு ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது என ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. சூப்பர் நாடகம் போவுது இலங்கையில் குரானும் ஹதிசும் உண்மையாகும் முஸ்லிம்கள் இதில் படிப்பினை பெற வேண்டும் (யாருடைய திர்ப்தியை நாடு அவேருடன் இன்னொருவரை பகை மூட்டுகின்றானோ ஆவீர்கள் இருவேரையும் அல்லாஹ் பகையாக்கி விடுகிறான் ) நபி மொழி அறிவிப்பது ஆய்ஷா (ரலி )

    ReplyDelete
  2. I think these guys are just playing games & making others fools.Let Muslims be wise, intelligent & united.Let these clowns dance till knock each other out.

    ReplyDelete
  3. நீங்க இரண்டு பேரும் புதிய நாடகம் ஆடுகிறது எமது சமூக மக்களை ஏமாற்றத்தான். முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற தீட்டும் சதித்திட்டம். நாம் இனி ஒருபோதும் ஏமாறப் போவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.