கோதபாயவின் உயிருக்கு அச்சுறுத்தல், சந்திரிகாவே சிறையிலடைக்க முயல்கிறார் - ஞானசாரர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட அரசஊழியர் என்பதால் அவரிற்கு தீங்கு விளைவிக்கவேண்டாம் என பொதுபலசேனா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாங்கள் எந்த அரசியல்வாதிக்கும் ஆதரவு வழங்கவில்லை ஆனால் கோத்தபாயவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் மீண்டும் புத்துயுர் பெறுகின்ற காரணத்தால் கோத்தபாய ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவோ கோத்தபாய ராஜபக்சவை சிறையிலடைக்க விரும்பவில்லை மாறாக சந்திரிகா குமாரதுங்கவே அதனை செய்யமுயல்கின்றார், மேற்குலக நாடுகளுடன் அவர் இதற்கான ஓப்பந்தத்தை செய்துள்ளார் என தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டவும், கொழும்பு நகரை அலங்காரப்படுத்தவும் பாரியளவில் கோதபாய பங்களிப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Ha ha ha.your boss getting trouble?thatswhat your heart and head burning?very good.may allah guide you
ReplyDeleteGet this creature first jailed before others
ReplyDeleteகோத்தபாயவை சிறையிலடைத்தால் உனக்கு என்ன பிரச்சினை. உன்னை ஆட்டி ஆட்டி வளர்த்தது அந்த கோத்தபாய என்பது ஊர்ஜிதம்.
ReplyDelete