இந்தியாவில் மதச்சார்பின்மை வலுவாக உள்ளது - நரேந்திர மோடி
ஜெர்மன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியாவில் பள்ளிகளில் ஜெர்மன் மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருத மொழியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் மோடியிடம் முறையிடப்படவிருந்ததது. இந்நிலையில் ஜெர்மனியில் மோடி பேசுகையில், இந்தியாவில் மதச்சார்பின்மை மிகவும் வலுவாக உள்ளது. அவ்வாறு மதச்சார்பின்மை பலவீனமானால் அது மொழி காரணமாகத்தான் இருக்கும். இங்கு ஜெர்மன் ரேடியோவில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்பதை வழக்கமாக வைத்துள்ளதை நான் பாராட்டுகிறேன் என்றார்.

Post a Comment