பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும்: நேபாள அமைச்சர் அச்சம்
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அந்நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பூகம்பத்தால் பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம். பாரம்பரிய கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 40 சதவீத வீடுகள் இடிந்துள்ளன. எங்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது என கூறினார்.
Post a Comment