Header Ads



19 நிறைவேற்றம்...!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை  வாக்குகளினால் நாடாளுமன்றத்தில்  28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

இதேவளை  சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். 
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.

தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் தாண்டி நேற்றைய தினம் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. அதில் உள்ள நன்மைகளை தெரிந்தவர்கள் இதில் விரிவாக பிரசுரிக்கவும்

    ReplyDelete

Powered by Blogger.