Header Ads



சவுதி அரேபியாவில் 3 இலங்கையர்களின், மரணதண்டனை இரத்து செய்யப்படும் வாய்ப்பு

சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை இரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்நாட்டு ஆளுநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார்.

கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்தே இலங்கையர்கள் மூவருக்கு சவுதி அரசு மரணதண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரிடமிருந்து நஸ்டஈட்டைப் பெற்று தண்டனையை இலகுபடுத்துவதற்கு, மரணமடைந்தவரின் சகோதரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.