Header Ads



25 வருடம் இமாமாக கடமையாற்றிய, மௌலவி ஆதம்பாவா கௌரவிக்கப்பட்டார்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பெரிய மௌலானா பள்ளிவாயலில் கடந்த 25 வருட காலம் தொடர்ச்சியாக பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி) தனது பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் சேவையை கௌரவித்து பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் 21-02-2015 நேற்று சனிக்கிழமை பெரிய மௌலானா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதன் போது மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி)யின் சேவையை பாராட்டி பள்ளிவாயல் மற்றும் பொது மக்களினால் அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.