மார்ச் 31 இல் பாகிஸ்தானுக்கு பறக்கிறார் மைத்திரி, அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடத் தீர்மானம்
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மார்ச் 31ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
Post a Comment