அசாத் சாலி, மொஹான் பீரிஸின் தொலைபேசி அழைப்புக்களை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் பிரதம நீதியரசராக இதுவரை செயற்பட்ட மொஹான் பீரிஸ் ஆகியோரின் தொலைபேசி அழைப்புக்களின் விபரங்களை பரிசோதிக்குமாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது..
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியினால், காவற்துறையினருக்கு இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு, சட்டவிரோதமாக நுழைந்த அவர், இதுவரை பிரதம நீதியரசராக பதவி வகித்த மொஹான் பீரிசை அந்த பதவியிலிருந்து விலகுமாறு அச்சுறுத்தியதாக கறுவாத்தோட்ட காவற்துறையினரிடம் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டை அடுத்தே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதலில், பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு சென்ற மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, பிரதம நீதியரசராக இதுவரை செயற்பட்ட மொஹான் பீரிசை சந்தித்துள்ளதாக கறுவாத்தோட்ட காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மாகாண சபை உறுப்பினர், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் நீதிமன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த தொலைபேசி அழைப்புக்களின் விபரங்களை பரிசோதிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
Post a Comment