Header Ads



மஹிந்தவின் பிள்ளைகள், தலைமை வகிப்பதிலும் பிரச்சினை

-Tm-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களான இலங்கை கடற்படை ரக்பி குழுவின் தலைவர் யோசித்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை இராணுவ ரக்பி குழுவின் தலைவர் ரோஹித்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் அந்தந்த விளையாட்டுக் குழுக்களின் தலைவர் பதவிகளிலிருந்து நீக்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

அந்தந்த குழுக்களில் அவ்விருவரும் விளையாடுதல் மற்றும் அவ்விருவருக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டே அவ்விருவரையும் இரு விளையாட்டுக் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.