Header Ads



தேசியத்தை அழிப்பதற்கு ஒருவருக்கும் இடம்தரப்படமாட்டாது - மகிந்த ராஜபக்ஸ

நாட்டை பிரிப்பதற்கு ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தேசியத்தை அழிப்பதற்கு ஒருவருக்கும் இடம்தரப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

இந்த நாட்டை பிரித்து தேசியத்தை சிதைப்பதற்கு இடமளிக்கப்படாது. சகல இனங்களும் ஒன்றுப்பட்டு வாழும் யுகம் இது. இதனை தடுக்கும் செயற்பாட்டை வந்து மேற்கொள்வதற்கு ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடமத்திய மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜனசேகர, தாய் நாட்டை நேசிக்கும் ஒரே தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே என குறிப்பிட்டார்.
கோட் பிலஸ் யூ என்று சொன்ன இந்த நாட்டுக்கு புதுசரணாய், தெவி பிஹிடாய், என்று பழக்கியது வேறு யாரும் அல்ல. எமது ஜனாதிபதியே இதுவொன்றே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. Whar about MR& Co having US residency??

    ReplyDelete
  2. Who destroyed the country then, according to your decision you need to get out and pay all the money back to the county.

    ReplyDelete

Powered by Blogger.