Header Ads



இன்னமும் நான் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறவில்லை - மொஹான் பீரிஸ் அறிக்கை

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து பணி நீக்கப்பட்ட முறைமை பிழையானது என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பணி நீக்கியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நான் பணி நீக்கப்பட்டுள்ளேன். நான் இன்னமும் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறவில்லை, காரியாலயத்திலிருந்து வெளியேறவும் இல்லை.

புற அழுத்தங்கள் காரணமாக என்னை பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் நீக்கியுள்ளனர்.

உரிமைகளை விடவும் அதிகாரம் வலுவானது. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் ஷிராணி பண்டாரநாயக்கவை பணி நீக்கியுள்ளனர். இதுவே இறுதி முடிவாகும் என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அடப்பாவி மனுஷா,

    நீங்கள் இன்னுமா போகவில்லை..?

    சட்டவிரோதமாக நீக்கியதைப்பற்றி பேசுகிறீர்களே உங்கள் பதவிப்பிரமாணமே சட்டவிரோதமானதாயிற்றே. ஒருவேளை இல்லீகலான பதவியை இல்லீகலாக நீக்கினால் அது லீகலாகிவிடும் என்று ஏதாவது விதிமுறை இருக்கின்றதா என்ன..?

    எல்லாக் கன்றுகளும் ஓடியதைப் பார்த்து வயிற்றுக் கன்றும் ஓடியதாம். அதுபோலத்தான் இருக்கின்றது உங்கள் கதை.

    ஒருவேளை 'இருங்கள் நாங்கள் சதி கிதி ஏதாவது செய்து புதிய ஆட்சியைக் கவிழ்த்ததும் நீங்கள்தான் மீண்டும் நீதியரசர்' என்று யாராவது இவரிடம் மண்டபத்தில் சொல்லியிருப்பார்களோ என்னவோ?

    ReplyDelete

Powered by Blogger.