பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சியின், அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க மைத்திரிபால இணக்கம்
அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு தலைமை வழங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையின் கீழ் சுதந்திரக் கட்சி வெற்றியீட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று கூறிய நிமல் சிறிபால டி சில்வா, ஏனைய கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment