இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்காக, இந்தியாவில் நோன்பு பிடித்த முஸ்லிம்கள்..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகா(த்)துஹு . அல்லாஹ் வின் நாட்டத்தின்படி அனைத்தும் நடந்தேறி இருக்கின்றன. உண்மைச் செய்திகளை உடனுக்குடன் அறியத்தந்த ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு முதற்கண் நன்றிகள். நானும் மேல் மாகாணத்தின் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பா.ம. உறுப்பினரின் சகோதரும் இந்தியாவில் தஅவா பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால், வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியாமைக்காக வருந்துகின்றோம்.
எனினும் இங்கு இந்திய அனேக முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருந்தார் கள் என்பது அவர்களின். மட்டுமல்ல அனேக ஜமாஅத் சகோதரர்கள் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று நோன்புகள் வைத்து , முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை இனத்தின் உரிமை பேணுகின்ற நல்லாட்சி மலர பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
மத்திய பிரதேசத்திலுள்ள குறிப்பாக இந்திய முஸ்லிம்களும் இவ்வாறு நோன்பிலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருத்ததானது வீழ்ச்சியுற்ற அரசு இலங்கை முஸ்லிம்களின் மனதிலிருந்து மாத்திரமல்லாது அண்டைய நாட்டு முஸ்லிம்களின் மனங்களில் இருந்தும் வெறுப்பை சம்பாதித்திருக்கின்றது என்பது நன்கு புலப்படுகிறது.
Post a Comment