அரசாங்கத்தை கவிழக்கும் நோக்குடனே, கோத்தபாய தற்போதும் உள்ளார் - ராஜித்த பரபரப்பு தகவல்
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகீயோர் இணைந்து உருவாக்கியுள்ள தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எதிர்பார்ப்புடனே முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ காணப்படுவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜத்த சேனாரத்னா, இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கும் கோத்தபய ராஜபக்ஸ ஸ்த்திரமற்ற நிலையை தோற்றுவிக்க முயற்சித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்போதைய அரசாங்கத்தை வீழத்தலாமென்ற நம்பிக்கையில் கோத்தபய ராஜபாக்ஸ உள்ளார் எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னா மேலும் தெரிவித்துள்ளார்.
பார்த்து பார்த்து இருக்காம கூண்டில் அடைக்க வேண்டியது தானே இந்த ஊழல் பேர்விழிகளை.
ReplyDelete"இந்த உலகின் முக்கியமான பிரச்சினையாக இருப்பது எதுவென்றால் முட்டாள்களும் அராஜகவாதிகளும் தன்னம்பிக்கையோடு காணப்படும் அதேவேளை அறிவாளிகளும் நல்லவர்களும் அவநம்பிக்கையோடும் தம்மீதே கொண்டிருக்கும் சந்தேகங்களோடும் வாழ்வதுதான்" என்றார் புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர்.
ReplyDeleteமுன்னாள் ஜனாதிபதி போன்ற அராஜகவாதிகளில் ஒருவராக தற்போதைய புதிய ஜனாதிபதி இருந்திருப்பாராயின் இந்தநேரம் இந்த பழைய பெருச்சாளிகள் அனைவரையும் கம்பி எண்ணும் வகையில் அடைத்திருப்பார்.
ஆனால் ஜனநாயக முறையில் அனைத்தையும் சட்டத்தின் அடிப்படையில் கையாள நினைக்கும் அவருடைய இங்கிதத்தை பயன்படுத்தி சதிகாரர்கள் தலையெடுப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். அதை முளையிலே கிள்ளியெறிவதற்கு புதிய ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர்கள் வலியுறுத்துவது நல்லது என்று தோன்றுகின்றது.