Header Ads



மண்சரிவுகளில் எழுவர் பலி, சிலரைக் காணவில்லை

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட கல்கந்தை, ரில்பொல மற்றும் ஹேகொட ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற  மண்சரிவுகளில் எழுவர் பலியாகியுள்ளதுடன் மேலும் சிலரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

கல்கந்தை மற்றும் ஹேகொடை பிரதேசங்களில் தலா இரண்டு பேரும் ரில்பொல பிரதேசத்தில் மூவருமாக மொத்தம் ஏழு பேர், மண்சரிவினால் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.

No comments

Powered by Blogger.