Header Ads



அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற முக்கியஸ்தர்கள், ரவூப் ஹக்கீமினால் கொழும்புக்கு அழைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்துலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை இதுவரை மேற்கொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற முக்கியஸ்தர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தன.

நாளை மறுதினம், 26 ஆம் திகதி இவர்களுக்கான கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் எந்த வேட்பாளருக்கு ஆதரவளித்தல் என்பது தொடர்பிலேயே ரவூப் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.