Header Ads



ரணில் நேற்று நாடு திரும்பினார், ஐ.தே.க.யின் முக்கிய கூட்டம் இன்று, முரண்பாடுகளும் நீடிப்பு

ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்ளும் வகையில் சகல எதிர்க்­கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்த பொது எதி­ரணி இன்று கொழும்பில் கூட­வுள்­ளது.இதன்­போது அர­சாங்­கத்­திற்கு சவா­லான பொது எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த வாரம் பொது எதி­ர­ணியின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்­த­போதுஒரு­சில முரண்­பா­டு­களின் கார­ண­மாக அந்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை. எனினும் அதன் பின்­ன­ரான தினங்­களில் பிர­தான எதிர்க்­கட்­சி­களும் அமைப்­பு­களும் ஒரு சில சந்­திப்­பு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் இன்று மீண்டும் பொது எதி­ர­ணியின் கூட்டம் இடம்­பெ­றலாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க வெளி­நாட்டு பய­ணத்­தினை மேற்­கொண்டு மீண்டும் நேற்று நாடு திரும்­பி­யுள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்­களும் ஏனைய எதிர்க்­கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­களும் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஐக்­கிய தேசியக் கட்சி

அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி தேர்தல் ஆயத்­தங்கள் தொடர்­பிலும் பொது எதி­ர­ணியின் செயற்­பா­டுகள் குறித்தும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக இன்று பிற்­பகல் அளவில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூடு­வ­தா­கவும் ஜனா­தி­பதி தேர்­தலை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அறி­வித்­த­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முடி­வு­களை தெரி­விக்­க­வி­ருப்­ப­தா­கவும் அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக தெரி­வித்தார்.

சிவில் அமைப்­பு­களின் நிலைப்­பாடு

எனினும் பொது எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் யார் என்­பதில் சிவில் அமைப்­புகள் மற்றும் ஒரு­சில அர­சியல் கட்­சி­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பொது வேட்­பா­ள­ராக ரணில் விக்­ர­ம­சிங்­கவை தெரி­வு­செய்­வதில் தாம் முரண்­பட்­டுள்­ள­தா­கவும் வேறு ஒரு­வரை பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரி­வித்­துள்­ள­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அறிக்கை ஒன்­றினை சமர்ப்­பிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

ஹெல உறு­ம­யவில் அழுத்தம்

இதே­வேலை அர­சாங்­கத்தின் சுயா­தீன கட்­சி­யாக தம்மை காட்­டிக்­கொண்­டி­ருக்கும் ஜாதிக ஹெல உறு­மய கட்சி ஜனா­தி­பதித் தேர்­தலில் தமது கொள்கைப் பத்­தி­ரத்­திற்கு அமைய அதனை ஏற்­றுக்­கொள்­ப­வர்­களை ஆத­ரிக்கத் தயார் எனவும் பொது எதி­ர­ணி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர். நேற்று கோட்டை நாக விகா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரர் மற்றும் ஹெல உறு­ம­யவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் ஆகி­யோ­ருக்கு இடை­யே­யான சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்ள நிலையில் இன்று அல்­லது நாளை ஜாதி­க­ஹெல உறு­மய பொது நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பொது எதி­ர­ணி­யுடன் பேச­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மாது­லு­வாவே சோபித்த தேரர்

மேலும்இ பொது எதி­ர­ணியின் சந்­திப்பு தொடர்பில் கோட்டை நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் ஜன­நா­ய­கத்­திற்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ள­ரு­மான மாது­லு­வாவே சோபித்த தேரர் குறிப்­பி­டு­கையில்;

கடந்த சில நாட்­க­ளாக சுக­யீ­ன­முற்­றதன் கார­ணத்­தினால் எதி­ர­ணி­களின் கூட்­டத்­துடன் தொடர்­பு­கொள்ள முடி­யா­து­போ­யி­ருந்­தது. எனினும் நாளை மீண்டும் சகல கட்­சி­க­ளையும் இணைந்து பொது எதிரணிக்கான சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளோம். அரசாங்கத்துடன் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்திய போதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனவே ஏதேனும் ஓர் வழிமுறையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கியாகவேண்டும். அதற்காக சகல கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியினை நான் எடுத்துள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.