Header Ads



நீண்­ட­ நேரம் நடைபெற்ற சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­ட­ம், பல விடயங்கள் ஆராய்வு

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று இரவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின் போது கட்சியின் சிரேஸ்ட தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த ராஜபக்சவின் பெயரை பிரோரித்தார்.

அதனை மற்றும் ஒரு சிரேஸ்ட தலைவரான டி எம் ஜெயரத்ன வழிமொழிந்தார்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை இன்று 20 ஆம் திகதி வியாழக்கிழமை நண்­பகல் 12 மணிக்கு வெளி­யி­டு­வ­தற்கு அர­சா­ங்கம் நேற்­றி­ரவு தீர்­மா­னித்­ததாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் நேற்று அலரி மாளி­கையில் இடம்­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்­தி­­லேயே இந்த முடிவு எடுக்­கப்­பட்டது. மேலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனாதி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஆளும் கூட்­டணியின் வேட்­பாளர் எனவும் நேற்­றைய சுதந்­திரக் கட்­சியின் மத்­தியகுழுக் கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்பட்­டுள்­ளதாகவும் அந்தமுக்கியஸ்தர் கூறினார்.

இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அங்­கீ­கா­ரத்தை பெறு­வ­தற்­காக இன்று வெள்ளிக்­கி­ழமை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் சந்­திப்பு ஒன்றை நடத்­துவ­த­ற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை இன்று வெளி­யி­டவும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்ற சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக்கூட்­டத்­தின்­போது எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நடை­பெ­ற­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது பல்­வேறு கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் பின்னர் நடை­பெற்ற சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­ட­மா­னது நீண்­ட­நேரம் இடம்­பெற்­றுள்­ளது. அத்­துடன் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­டு­வது குறித்தும் பேசப்­பட்­டுள்­ளது. இறு­தியில் இன்று அறி­வித்­தலை வெளி­யி­டு­வது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று இரவு இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்டம் குறு­கிய நேரத்தில் முடிந்­து­விட்­ட­தா­கவும் அதன் பின்னர் உட­ன­டி­யா­கவே சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் ஆரம்­பித்­து­விட்­ட­தா­கவும் அர­சாங்­கத்தில் அங்கம் வகி்க்கும் பங்­காளிக் கட்சி ஒன்றின் முக்­கி­யஸ்தர் தெரி­வித்தார்.

அந்­த­வ­கையில் மிக நீண்­ட­நேரம் நடை­பெற்ற சுதந்­திரக் கட்­சியின் மத்­தியக் குழுக்­கூட்­டத்தின் போது பல விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­ட­தா­கவும் கலந்­து­ரை­யா­டல்கள் நீண்­டு­கொண்டே சென்­ற­தா­கவும் அர­சாங்கத் தரப்பு தக­வல்கள் தெரி­வித்­தன.

இதே­வேளை மத்­திய குழுக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக்ஷ குறிப்­பி­டு­கையில்,

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே ஆளும் கூட்­ட­ணியின் வேட்­பாளர் எனவும் நேற்­றைய சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை அங்­கீ­க­ரிக்க நாளை ( இன்று) ஐக­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங­காளிக் கட்­சி­களின் கூட்­டத்தை நடத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது என்றார்.

இதே­வேளை ஜாதிக ஹெல உறு­ம­யவின் முக்­கி­யஸ்­தர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க மற்றும் உதண கம்­மன்­பில ஆகியோர் அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தமை தொடர்­பிலும் நீண்­ட­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நடை­பெற்ற இந்த மத்­திய குழுக் கூட்­டத்தில் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இது இவ்­வாறு இருக்க ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று புதன்­கி­ழமை நள்­ளி­ரவு வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. எனினும் நேற்­றைய கூட்­டத்தின் பின்னர் இன்று வௌ்ளிக­கி­ழமை நண்­பகல் 12 மணிக்கு வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­விப்பு உள்­ள­டங்­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­னதும் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை தேர்தல் திணைக்­களம் மேற்­கொள்ளும். தேர்தல் திணைக்­க­ளத்­துக்கு வர்த்­த­மானி அறி­வித்தல் கிடைத்­ததும் தேர்தல் திணைக்­களம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் நாட்டின் ஏழா­வது ஜனா­தி­பதி தேர்­தலே நடை­பெ­ற­வுள்­ளது. முத­லா­வது ஜனா­தி­பதி தேர்தல் கடந்த 1982 ஆம் ஆண்டு நடை­பெற்­றது. இரண்­டா­வது தேர்தல் 1988 ஆம் ஆண்­டிலும் மூன்­றா­வது ஜனா­தி­பதி தேர்தல் 1994 ஆம் ஆண்­டிலும் நான்­கா­வது ஜனா­தி­பதி தேர்தல் 1999 ஆம் ஆண்­டிலும் ஐந்­தா­வது ஜனா­தி­பதி தேர்தல் 2005 ஆம் ஆண்­டிலும் ஆறா­வது ஜனா­தி­பதி தேர்தல் 2010 ஆம் ஆண­டிலும் நடை­பெற்­றன.

இதற்கு முன்னர் ஜே.ஆர். ஜய­வர்த்­தனஇ ஆர். பிரே­ம­தாசஇ டி.பி. விஜே­துங்கஇ சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இஆகியோர் நாட்டின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­க­ளாக பதவி வகித்­துள்­ளனர். கடந்த 2005 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பதவி வகித்து வரு­கின்றார். 2005 ஆம் ஆண்டு முத­லா­வது தட­வை­யா­கவும் கடந்த 2010 ஆம் ஆண்டு இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரிவு செய்­யப்­பட்டார்.

ஜனா­தி­ப­தியின் இரண்­டா­வது பத­விக்­கா­லத்­துக்­கான நான்கு வரு­டங்கள் நேற்று 19 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்தே நேற்று நள்­ளி­ரவு வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

அதன்­படி எதிர்­வரும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

வர்த்­த­மானி அறி­வித்தல் இன்று மாலை தேர்தல் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­படும் பட்­சத்தில் இன்­றைய தினத்­தி­லி­ருந்து 16 நாட்­களின் பின்னர் வேட்பு மனுத் தாக்­க­லுக்­கான திக­திகள் அறி­விக்­கப்­படும். அதா­வது வர்த்­த­மானி ாக்­க­லுக்­கான திக­திகள் அறி­விக்­கப்­படும். அதா­வது வர்த்­த­மா­னி அறி­வித்தல் வெளியா­கி 16 தினங்களின் பின்னரும் 30 நாட்­க­ளுக்குள்ளும் வேட்பு மனுத் தாக்கல் இடம்­பெ­ற­­வேண்­டும். அதனை தாண்டிச் செல்ல முடி­யாது.

அத்துடன் வேட்பு மனு­த் தாக்கல் செய்­யப்­பட்ட தின­த்­தி­லி­ருந்து 30 நாட்­களின் பின்னரான ஒரு நாளில் தேர்தல் நடை­பெறும் திக­தி இருக்­க­வேண்டும். அதாவது 30 நாட்களின் பின்னரும் 60 நாட்களுக்குள்ளும் தேர்தல் நடத்தப்படவேண்டும். 60 நாட்­களை தாண்டிச் செல்ல முடி­யாது. அந்­த­வ­கையில் ஜன­வரி மாத முதல் வார­த்தில் தேர்தல் நடைபெ­ற­­லாம் என எதிர்­பார்க்­கப்­படு­கின்­றது.

No comments

Powered by Blogger.