Header Ads



முஸ்லிம் தலைவர்கள் அமைதியாகவே இருக்கின்றனர் - மகிந்த ராஜபக்ஷ

பொது வேட்பாளர் யார் என்பதை தெரிவு செய்ய முடியாது எதிர்க்கட்சிகளின் கூட்டணி இசை நாற்காலி போட்டியை நடத்தி வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

12 ஆயிரம் பேருக்கு காணி உறுதியை வழங்கும் நிகழ்வு குருணாகல் மாளிகா மைதானத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கடந்த முறை ஜனாதிபதியாக தெரிவான நாள் முதல் நான் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகிறேன்.

எதிர்க்கட்சிகளுக்கு தயாராக காலத்தை வழங்கவே முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்டது.

எமது பிக்கு ஒருவரும் இசை நாற்காலியில் அமர இசை ஒலிப்பரப்பு செய்து சுற்றி வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் மிகப் பெரிய இரட்சகர்களாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.

நாட்டில் நடக்கும் சாதாரணமான சம்பவங்களை பெரிதுப்படுத்தி வெளிநாடுகளுக்கு காட்ட இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அரபு புரட்சியை பற்றி பேசுகின்றனர். ஆனால் அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படட கொடூரமான கொலைகள் பற்றி அவர்கள் பேசுவதில்லை.

இது குறித்து நாட்டில் உள்ள முஸ்லிம் தலைவர்களும் அமைதியாகவே இருந்து வருகின்றனர்.

இனவாத, மத வாத மற்றும் குலவாத பேதங்களை ஏற்படுத்தி யுத்தத்தில் செய்ய முடியாமல் போனதை செய்ய முயற்சிப்பதுடன் அமைதியாக இருக்கும் மக்களை தூண்ட முயற்சிக்கின்றனர் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.